Saturday, November 6, 2010

கோபால கிருஷ்ண பாரதி பாடல்கள்

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

க்ருபாநிதி இவரை போல்
கிடைக்குமோ இத் தரணி தனில் (X)

ஒரு தரம் சிவ சிதம்பரம் என்று உரைத்தால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரிய புலயர் மூவர் பதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை (X)

No comments:

Post a Comment